இறைவர் : அருள்மிகு ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
இறைவி :அருள்மிகு அழகாம்பிகை அம்பிகை
தல மரம் : மரம்
தீர்த்தம் :ஜம்பு தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ,செம்பாக்கம் , செங்கல்பட்டு,தல வரலாறு.
சூரியன், சந்திரன், புதன் முதலான ஒன்பது கிரகங்களும் இங்கு வழிபட்டது, இக்கோவிலின் தனிச் சிறப்பு.
1700 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான திருக்கோவில். 63 நாயன்மார்களில் ஒருவரான செம்பியன் கோட்செங்கட் சோழ அரசன் புத்திர பாக்கியம் பெற வேண்டி, சிவனை வணங்கி அருள் பெற்று எழுப்பப்பட்ட சிவாலயம். திருமுறை ஆசிரியரான கண்டராதித்த சோழர், மற்றும் விக்கிரம சோழர், செம்பியன் மாதேவி, விஜயநகர அரசர் ஆகியோரால் திருப்பணிகள் செய்யப்பட்ட பழமையான திருக்கோவில். வாசுகி நாகம், நாக கன்னியர்கள், அகத்தியர், திருஞானசம்பந்தர், முழு நீறு பூசிய முனிவர்கள், நவ வீரர்கள், ஸ்ரீமத் குமார தேவர், சிதம்பர சுவாமிகள், ஞானியார் சுவாமிகள் மற்றும் பல பெருமான்கள் வழிபட்ட உன்னதமான ஸ்தலம்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவில். செம்பாக்கம் கிராமம் , காட்டுர் . செங்கல்பட்டு வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்
திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்: