இறைவர் : அருள்மிகு ஸ்ரீ பூதகிரீசுவரர்
இறைவி :அருள்மிகு ஆரண வல்லி
தல மரம் : மரம்
தீர்த்தம் :தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ பூதகிரீசுவரர் திருக்கோயில் ,கூவத்தூர், செங்கல்பட்டு,தல வரலாறு.
செங்கற்பட்டு மாவட்டத்தில் வழிபாடு சிறப்பு மிக்க திருப்போரூர் அருகில் வரலாற்று பெருமையுடன் திகழ்கின்றது சிறுதாவூர்.
இவ்வூரில் வடகிழக்கு மூலையில் அருள்மிகு ஆரண வல்லி சமேத பூதகிரீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. புராண வரலாற்று தகவல்களின்படி, காசி தலத்தில் பிரம்மா செய்த யாகத்தில் இறைவன் ஆணைக்கு இணங்க கலந்து கொண்ட பூதகணங்கள், யாகம் முடிந்து திரும்புகையில் இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டனவாம். பூத கணங்கள் வழிபட்டதால் இத்தல இறைவன் பூதகிரீசுவரர் என்றும் பூதேசுவரர் என்றும் போற்றப்படுகிறார்.
கிழக்கு நோக்கிய திருக்கோயில் தொண்டை மண்டலத்துக்குரிய கஜபிருஷ்ட வடிவத்தில் கருவறை அமைந்துள்ளது. கருவறையில் இறைவன் திருமேனி வெண்மையாகக் காட்சி தருவது சிறப்பாகும். "பால்வண்ணநாதர்' எனவும் அழைக்கப்படுகின்றார்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு பூதகிரீசுவரர் திருக்கோயில் , சிறுதாவூர். திருக்கழுக்குன்றம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்
திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை8 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்:
திருப்போரூர் தலத்திலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் 6 கி.மீ. தொலைவில் சிறுதாவூர் அமைந்துள்ளது.